Friday, May 29, 2009

மன்னிப்பு...Sorry..Excuse Me...

  • ஹே,..மன்னிச்சுக்கோப்பா
  • சாரி,..... :-(((
  • தெரியமாச்செய்துட்டேன்...நிஜம்மா
  • மாப்பு கேட்கறேங்க
  • சாரி கேட்டோ.. (மலையாளம்)
  • ஷெமிக்கு..........(மலையாளம்)
  • சாரியண்டி........(தெலுங்கு....நமக்கு தலைவர் சொன்ன "இப்புடுச் சூடு"க்கு மேல தெலுங்கு தெரியாது :-)
  • பகுத் சாரி.... .....(ஹிந்தில சாரிக்கு என்ன? "ஷுகிரியா?" "தன்யவாத்"? ஹி.. ஹி ,..மே நோ ஹிந்தி ஆத்தா ஹை! :))) )
என்னடா,..திடீர்ன்னு மன்னிக்கச்சொல்றாளேன்னு நீங்க டெரர் ஆகிறது தெரியுது. அதுக்கு முன்னால ஏன் இப்படி ஒரு தலைப்புல பதிவு போட தோணுச்சுன்னா...ஏன் தோணுச்சுன்னா..?அச்சட்ச்சோ ...எப்படி தோணுச்சு.:-(,..சும்மா மானவாரியா அப்படியே ரோசிச்சப்ப இப்படி தோணுச்சுன்னு கதை சொல்ல மாட்டேன்,..இது ரொம்ப நாள ஓடிட்டு இருந்த ரோசனை தான். (ஆமா,..நாங்களும் சிந்திப்போம்லா..:-)


சரி விஷயத்துக்கு வாரேன்.

இப்ப யார பார்த்தாலும்,....
  • "இந்த வாழ்க்கை ரொம்ப டென்ச்னா இருக்கு,.."..
  • "டைம் இல்ல,."..."ரொம்ப வேலை,..".
  • "செம கடியா இருக்கு,..".."ஆபிஸ்ல ரப்ச்சர் தாங்க முடியல,.."...
  • "சே! இதுக்கு "நான் கடவுள்" ருத்ரன் மாதிரி "அஹம் பிரம்மாஸ்மி"ன்னு போகலாம் (ஆனா,அதுக்கு முடி நீளமா வளர்க்கணும்.அப்பறம் டை வேற அடிக்கணும் :-) )",..
  • "என்ன உலகம் அங்க கொல்றாங்க,..இங்க சுருட்றாங்க,.அது,..இதுன்னு,..."
இப்படி, நம்முடைய வருத்தங்களுக்கு பல வித காரணம் சொல்றதுக்கு முன்னால...உண்மையான ஒரு காரணத்த சொல்லுவோமா...?

அதாவது நமக்கே தெரியாத "அந்த" ஒரு காரணத்த சொல்லுவோமா? "நான் என் வாழ்க்கைல சில, பல பேர்களை மன்னிக்கல!..அவங்க செய்தத மறக்கல" அப்படீங்கற காரணத்த.

என்னது,...மன்னிப்புக்கும் மனுஷ தினசரி வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்" ங்றீங்களா? இருக்கே..... எனக்கு தெரியுமே...ஆமா..நானே கண்டுபிடிச்சேன். ")))

"வந்துட்டாய்ய உளவியல் நிபுணரு,..காசு வாங்காமா கன்சல்டிங்க் பண்ண"ன்னு கிண்டல் பண்றவங்களுக்கு நான் பணிவ சொல்றதெல்லாம் இது தாங்க. நான் என் வாழ்க்கைல கஷ்டம் தந்த முக்காவாசி பேர மன்னிச்சிட்டேன்,..மிச்ச காவாசி பேர மறந்துட்டேன்....(சாமி புண்ணியத்துல இப்ப எனக்கு கூட இருக்கிறவங்களெல்லாம் நல்லவங்க தான் :))

இப்பக் கூட சில பேர் சொல்லலாம் "ஓ,..இப்படிக் கூட தன்ன பத்தி பெருமையா தம்பட்டம் அடிச்சிக்க முடியுமான்னு". அவங்களுக்கு நான் சொல்ற்தெல்லாம் "அன்புடையீர்,.தினம் தினம் சமைக்கிறோம்,..வெங்காயம் வதக்கிறப்போ,..அந்த பதார்த்ததுக்குத் தேவையான உப்பப் போட்டு வதக்கினா சீக்கிரம் வெங்காயம் வெந்திடுமுன்னு தெரிஞ்சா நாம நாலு பேருக்கு சொல்ல மாட்டோமா...? சொல்லுங்க? நான் சொல்லுவேன்பா...:-) ( வெங்காயத்த வதக்கிறப்பல்லாம் என்ன நினைச்சாலும் நினைச்சுப்பாங்க..:)

சரி சரி மன்னிக்க வருவோம்...
வாழ்க்கை ரொம்ப சீக்கரம் சீக்கரம ஓடிக்கிட்டு இருக்கு. இல்ல, இல்ல பறந்துகிட்டு இருக்கு. இதுல சும்மா தேவை இல்லாம வருத்தத சுமந்துகிட்டு. சந்தோஷமா இருக்கத் தான வாழ்க்கை? கடவுள் எவ்வளவு ரசிச்சு, ரசிச்சு இந்த உலகத்த, உங்கள படைச்சிருக்கார், "என்ஜாயா போடுறத விட்டுட்டு" சும்மா,..ஏன் மத்தவங்க நமக்கு பண்ண தப்பையே நினைச்சு நம்மளேயே நாம ஏன் தண்டிக்கனும் சொல்லுங்க?

"REVENGE IS SWEET"ன்னு சொன்னவன்னு மன்னிக்க பழகிருந்தா என்ன சொல்லிருப்பார் தெரியுமா? "FORGIVING IS BLISS"ன்னு :-)


இந்த உலகத்துல புதுசா வரப் போற பிரச்சினையின்னு எதுவுமேயில்ல. எல்லா பிரச்சனையும் ஏற்பட்டாச்சு. எல்லாத்துக் குரிய தீர்வுகளும் கண்டுபிடிச்சாச்சு..அதுல ஒரு அருமையான தீர்வு "மனுஷன் சந்தோசமா இருக்க தேவை மன்னிக்கும் மனப்பான்மை".

2000 வருஷத்துக்கு முன்னாலயே, ஏசு சாமி என்ன சொன்னாரு "ஒருத்தன் ஒரு கன்னத்துல அடிச்சா இன்னொரு கன்னத்த காண்பி"ங்கறாரு. மன்னிச்சிரு,..ஒரு சான்ஸ் கொடுன்னு சொல்றாரு.

மனசத் தொட்டு சொல்லுங்க "உங்கள யாரோ, இப்ப நீங்க கூட, மன்னிக்க முடியாத விஷயத்த மன்னிச்சிருக்காங்க தானே?"...ஹேய்,..பொய் சொல்லக் கூடாது,....:-)
அப்போ ...சின்ன வயசுல...அந்த சம்பவம்,..ஞாபகம் வருதா...? நல்லா யோசிங்க வரும் வரும்.. :-)))

சரி இவ்வளவு சொல்லியும் புரியலைன்ன,..நம்ம உலக நாயகன் கமல் விர்ர்ர்ர்ர்ருமாண்டீல சொன்னத சொல்றேன்,..
"மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன் (மன்னிப்பு கேட்கறவன் பெரிய மனுசன் (இல்ல வீரன் :))))

மன்னிச்சு எல்லோரும் மனுசனாவோம்,..வாங்க :-)))

(முடியாதுன்னு பின்னூட்டம் போடறவங்களெல்லாம்,..ஏலியன்ஸ் :( )

தப்பா ஏதாவது சொல்லிருந்தா மன்னிச்சிப்போட்டுருங்கண்ணா..வாரேன்ன்ன்!!!

டி.ஸ்.கி
மன்னிப்பத் தவிர இன்னொரு விஷயம் வாழ்க்கைய சுவாரசியம் ஆக்குமே, :-)அது என்ன..?
அது தாங்க, பாதி கோலிவுட் படத்தோட கதை அவுட்லைன்... YES,..பரத் சந்தியா நடிச்ச மேட்டர்...ம்ம்..கரெக்ட்,..காதல் ....(ஊய்,...ஊய்...நீங்க சீட்டி அடிக்கிறது கேட்குது,...ஆனா,..அது இன்னொரு பதிவுல :)))

Sunday, May 10, 2009

அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

வலையுலக அம்மாக்களுக்கு என்னுடைய மனமார்ந்த "அன்னையர் தின வாழ்த்துக்கள்"

Wednesday, April 22, 2009

யார் ஹீரோ,..

நல்ல வேளையா,..அன்பு நண்பர் வாசன் அந்த புகைப்படத்தில் இருப்பது யாருன்னு கண்டுபிடிச்சார்...ஏன்னா யாரும் கண்டுபிடிக்காத வரைக்கும் நான் அடுத்த பதிவு போடக்கூடாதுன்னு வச்சிருந்துதேன்..


நான் என்ன சொல்ல வந்தேனா...நாம எவ்வளவு மெனக்கிட்டு சினிமா பிரபலங்களோட வாழ்க்கை வரலாற தெரிஞ்சி வச்சிருக்கோம்,...ஆனா "நான் ஒரே ஒரு கடவுளைத் தான் வணங்குகிறேன்,..அதன் பெயர் அன்பு"ன்னு சொன்ன அந்த பாசாமான தாயைப் பத்தி எத்தனை பேரு தெரிஞ்சி வைச்சிருக்கோம்.



பார்த்திபனின் கிறுக்கல்கள் புத்தகத்துல அன்னையப் பற்றி ஒரு சின்ன கவிதை உண்டு. சரியா ஞாபகம் இல்ல இருந்தாலும் இப்படித் தான் பொருள் பட சொல்லும்

"என்னை மட்டும் கருவில் கொண்டதால் அவள் எனக்கு அன்னை
நீ
அன்பை கருவில் கொண்டதால் உலகிற்கே அன்னை"

உண்மையிலே அவர் கவிதையின் கடைசி வரி முத்தாய்ப்பா முடியும். ஞாபகம் இல்லாததால் அந்த டச் கொண்டு வர முடியல

அன்னை 12 வயதுலேயே ஒரு அழகான கனவு மற்றும் கையில் 3 வெள்ளிகளை வைத்துக் கொண்டு சொன்னார்களாம்." எனக்கொரு கனவுண்டு,..இந்த உலகில் ஏழை எளியோரைக்கு பணிவிடை செய்யும்/காக்கும் கனவு" என்று. அப்போது அவரை எள்ளி நகைத்தவரிடம் மிகத் தெளிவாக மிக கனிவாக சொன்னாரம் "கனவு என்னுடையது அதை நிறைவேற்றும் கடமை ஆண்டவர்க்குரியது, அவர் துணையுடன் என் கனவைச்செவ்வனே செய்து முடிப்பேனேன்று."

அன்னைஅவர்கள் அல்லவா உண்மையான ஹீரோயின் . பல் துலக்க பன்னீரும், குளிக்க பிஸ்லரியும் கேட்கும்,..டாக்டர் ஆகிருப்பேன்,..கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சிருப்பேன்னு பீலா விடும் ஹீரோயின் ஹீரோக்களின் துதிகளை எப்போது விடுவோம்.

ஹீரோவின் விளக்கம் என்ன தெரியுமா "ஒருசாதரண மனிதன் அசாதரணக் காரியத்தை(நல்ல) செய்ய விழையும்/துணியும் போது ஹீரோ ஆகிறான். "

ஆமானுஷ்ய சக்திகள் படைத்தவனல்ல ஹீரோ,..அவன் காமிக் புக்குகளில் ஸ்பைடர் மேனாகவும், மாயாவியாகவும், சூப்பர் மேனாகவும் குழந்தைகளுக்கு பூச்சாண்டிக் காட்டிக் கொண்டுருப்பவன்.

அன்னையைப் போல இன்னும் பலர் தாம் வாழ்வின் உண்மையான ஹீரோ!!!

இவர்களைப் பற்றி நாம் எப்போது இளையவர்களுக்கு சொல்லித்தரப்போறோம்...இல்லை நமக்குச்சொல்லும் அளவுக்குத்தான் இவர்களைப் பற்றித்தெரியுமா?

குழந்தைகளுக்கு ரோல் மாடல்களை வெளியில் தேடுவானேன் நாமே ஏன் ஒரு ஹீரோவாகாக் கூடாது,....?

Sunday, April 5, 2009

நாலும் தெரிஞ்சவங்களா நீங்க? நிஜமா..

நாலும் தெரிஞ்சவங்களா நீங்க? நிஜமா..அப்ப ஒரு சவால்

இந்தப் படத்துல இருக்கிறக் குட்டிப்பாப்பா யாருன்னு தெரியுமா ?


இப்ப

உலக அழகின்னு ஆரம்பிச்சிச்சு,..இப்ப இயந்திரன்ல அவங்க வாங்கற சம்பளம் வரைக்கும் தெரியும் தான
``````````````````````````````````````````````````````````


இவரு,...முகஜாடை மாறவேயில்ல இல்ல..அப்பாவக் கொண்டு வந்துருக்கார்ன்னு நினைக்கிறேன். இவர் கதையும் புட்டு புட்டு வப்பீங்க
``````````````````````````````````````````````````````````
இவரு...?


இவரால நம்மூர்ல பாதி பசங்க ஜிம்ல தான் கிடக்குறாய்ஙே. ..சட்டில இருந்தா தானே அகப்பையில வரும்னு யாருக்கு தெரியுது..என்னவோ போங்க
``````````````````````````````````````````````````````````

இவங்க வடக்கு தெற்குன்னு பாரபட்சமில்லாம எல்லா மனச கொள்ளயடிச்சிட்டுப் போன கஜோல்ன்னு கரீக்கட்டா சொல்லிருப்பீங்க
``````````````````````````````````````````````````````````

இவங்க ஓம் சாந்தி ஓம்ல வந்து பசங்க மனசாந்தியக் கெடுத்தவங்க. மத்த விவரமெல்லாம் விரல் நுனியில்ல வச்சிருப்பீங்களே :))
``````````````````````````````````````````````````````````
இவங்க ??

தெரியலையா,...? நானே சொல்றேன். கத்ரினா. சரி சரி...இப்ப உங்களுக்கு இவங்க லேட்டஸ்ட் பாய் ஃப்ரண்டு விஷயம் வரைக்கும் தெரியுமே :))
``````````````````````````````````````````````````````````
இவங்க..?

சரியா சொல்லீட்டீங்க,..த்ரிஷா தான். இவங்க அப்பா அம்மா பேரு ஊரு எல்லா மேட்டரும் சொல்வீங்க
``````````````````````````````````````````````````````````
இதெல்லாம் ஒ.கே.. இவங்க யாருன்னு சொல்லுங்க.. நீங்க பெரிய கில்லாடின்னு ஒத்துக்கிறேன்

Friday, March 13, 2009

மொக்கைகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா!

எங்க ஆத்தா, அலமேலு, பொன்னாத்தா..."யக்கோவ்....நம்ம ஏரியா பக்கம் வந்துகினு போறியா,கொஞ்சம் விவகாரம் இருக்கு" அப்பிடின்னு பின்னுட்டம் போட்டப்பவே இது கொஞ்சம் விவகாரம் இல்ல பெரிய விவகாரம்ன்னு, மனசுல மணி அடிச்சது.

ஆலயமணி இல்லிங்க, இது கிலில அடிக்கிற அலார மணி. கிடு கிடுனு போய் பார்த்தா...ஆப்பு அழகாக வைக்கப் பட்டிருந்தது. இது தான் "Passing the ஆப்பா" ?(ஆங்கிலத்துல Passing the Buckன்னு சொல்ற மாதிரி. சண்டக்கோழிக்கிட்ட் சாக்கிரதையா இருக்கணும்ப்பா..)

தொடர் பதிவு போடச் சொன்ன, தங்கமான பொன்னாத்தா!
என்னியெல்லாம் ஒரு ஆளா மதிச்சுக் கூப்பிடத்துக்கு நெம்ப நெம்ப ஸந்தோஸம்!(அவ்வ்வ்..)

மொக்கையா என்ன எழுதலாம்னு...ரொம்ப சிந்திச்சேன்,..ரொம்ப ரொம்ப சிந்திச்சேன், கார் ஓட்டறப்ப் ,..கடிப் போட்ட மீட்டிங்க் நடுவுல,..படுத்துட்டு யோசிச்சேன்,..உட்கார்ந்துட்டு யோசிச்சேன்.

அப்பத் தான் ஒரு உண்மை எனக்கு தோணுச்சு,..என்னையப் பத்தின உண்மை.

நான் வாய தொறந்தா மூடாத கோஷ்டி. இல்ல,..இல்ல.. கோஷ்டிக்குத் தலைவி! :))

என் கதைய சலிக்காம கேட்கற ஒரே ஆளு...என் ஆளு :) ம் ம்ன்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு. (ஆனா நான் சொன்னத திருப்பிச் சொல்லச் சொன்னா,..இஹி இஹின்னு சிரிச்சு மழுப்பிடுவாரு)


அது ஏனோ தெரில, என்ன மாயமோ புரில,
நம்ம பேச்சக் கேட்கற மத்தவைங்க்கெல்லாம் "ஆத்தாடி இது என்ன கலி காலக் கொடுமைன்னு." எஸ் ஆகிருவாங்க :((

போறாங்க போங்க...ஞானிகளின் பேச்சு சாமானியர்களுக்கு புரியாதது தான் (ஆமா,..இப்படியே.. நானே என்னைய உசுப்பேதிக்க வேண்டியது தான் :))

நாமா, இதுக்கெல்லாம் அஞ்சினவங்களா..சொல்லுங்க? சரி, அப்ப நாமளே சீர்யஸா எதையாவது போட்டு விடுவோம்னு நினைச்சப்பா தான் இன்னைக்கு வெள்ளிக் கிழமை ஆனந்த விகடன் வந்திருக்குமேன்னு ஞாபகம் வந்திடுச்சு.

விகடன்ல "டேக் ஓ.கே"ன்னு ஒரு மரணக்கடியா கிஷோர்ன்னு ஒரு கொசு போடுற மொக்கைய விட டபுள் ஸ்ட்ராங்க் இன்ன வரைக்கும் நான் பாக்கலைங்க,..படிக்கலைங்க... அதனால, நான் சொன்னேன்னு விகடன் போய் படிங்க,..சத்தியமா திருப்பி விகடன படிக்க மாட்டீங்க. அப்படி ஒரு கடி!

சரி,..சரி டைம் ஆச்சு. பொன்னத்தா மாதிரி ஒரு மொக்கை கவிஜப் போட்டு முடிக்கிறேங்க (தொண்ட வலின்னு NYQUIL குடிச்சேன் மப்பா இருக்கு)

இன்னா கவிஜ போடலம்?..ம்ம்ம்

ஆங்,..ஆப்பு...மப்பு..
டி.ஆர் மாதிரி மன்னிச்சுக்கோங்க விஜய டி.ஆர் மாதிரி ஒரு கவிஜச் சொல்றேன். (அடுக்கு மொழிக் கவிதை)

அய்யோ,..பாவம்!
(யாரன்னு சொல்றீங்கள..உங்களத்தான் :)) ஹி ஹி )

ஹியர் க்ம்ஸ் த கவிஜ

பொன்னாத்தா Blogல வைச்சாங்க ஆப்பு!
NYQUIL குடிச்சா வரும் மப்பு!
சின்ன வயசுல வச்சு விளையாடினேன் சொப்பு!
அரியர்ஸ்க்கு இன்னொரு பெயரு கப்பு!
Jeansல வச்சாங்க ஜிப்பு!

ரோட் சைட் ரோமியோ தேடுறது பிக்கப்பு!
இவங்களுக்கு நம்மூர்ல இருக்குது லாக்க்ப்பு!
எங்க அப்பாவுக்கு பிடிச்ச பூ குஷ்பூ!
குஷ்பூ கருத்துச் சொன்ன விஷயம் கற்பு!
அதுக்கு கிடைத்தது நல்ல ஆப்பு!

(எப்படி ஆப்பிலேத் தொடங்கி,..ஆப்பிலே முடிச்சிருக்கேன் பாருங்க. சே! கலக்குறேன்ல...என்னவோ தெரிலங்க கடவுள் என்னைய இப்படி சுப்பர்ர்ராப் படைச்சிட்டாரு)

மொக்கை கவி முடிஞ்சாட்ச்சு,...அடுத்து நான் மொக்க போட அழைப்பது

மத்திய மூளையில இருந்து யோசிக்கும் என் கல்லூரித் தோழர் வாசன்
மற்றும் http://vsvasan.blogspot.com/

புதுசா வலையுலகுக்கு மிக ஆர்வத்துடன் பிரவேசித்திருக்கும் இனியப் பள்ளிக் காலத் தோழி பொற்கொடி http://www.nithru.blogspot.com/

வருக! வருக!,.வந்து மொக்கையப் போட்டு ஜோதியில் ஐக்கியமாகவும்!!!

Saturday, February 28, 2009

சினேகம்,..நட்பு,..தோழமை,..

நட்ப பத்தி புதுசா நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லங்க...காதல்,..தாய்மை மாதிரி அதுவும் அலாதியான பிரியத்தைச் சொல்ற,.. சொல்ல.. கடவுள் தந்த வழி, வரம்.

நட்பு என் வாழ்க்கையில ஏற்படுத்தின மாற்றங்கள் ஏராளம். ஒரு சங்கோஜமும் இல்லாம உள்ளதை உள்ளபடிச் சொல்லி சிரிக்க,.. மகிழ,.. திட்ட,.. திட்டு வாங்க..நட்பில் மாத்திரம் தான் சாத்தியப்படும்.

எங்கேயாவது "என் ஃபிரண்ட் என் அம்மா மாதிரி " இல்லைனா "என் ஃப்ரண்ட் அப்பா மாதிரி"ன்னு சொல்ல கேட்டுருக்கீங்களா...ம்ம்..90% கேட்டுருக்க மாட்டீங்க.

ஆனா 100% "என் அம்மா என் ஃப்ரண்ட் மாதிரி" "என் மனைவி என் ஃப்ரண்ட் மாதிரின்னு" யாரவது சொல்ல கேட்டிருப்பீங்க. அது ஏன் கிறிஸ்துவர்கள் "ஏசு, என் நண்பர்" ன்னு கடவுளயே நம்ம வட்டாரத்துக்குள்ள எல்லாருக்கும் எளிதா புரியற மாதிரி ஒரு ஆழ்ந்த உறவச் சொல்லற இலக்கணமா, உவமையா இருக்குதுங்க இந்த நட்பு

அம்மா,...தாயே..இந்த கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும்,..மேட்டருக்கு வான்னு நீங்க சொல்றது கேட்குது..இதோ வந்துட்டேன் வந்துட்டேன்...



அப்படி Friends எனக்கும் இருக்கு..ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு இடம் கொடுத்து ஓய்யாராம உசரத்துல உட்கார வச்சிருக்கேன்...ஆனாலும் இப்ப நான் சொல்லப் போற நட்பு கொஞ்சம் வித்தியாசமானது. படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க

2004ல நவம்பர் மாதம் திருமணமானப் பின் நான் தனியா இந்தியா போய்கிட்டு இருந்தேன்.(சரி, சரி..தனியானா தனியா இல்ல Flightல பெயர் தெரியாத பல பேர்களோட)

லுஃப்தான்சா விமானம் ஃப்ரங்க்ஃப்ர்ட்ல இருந்து கிளம்பறப்போ, பக்கத்துல யாரு உட்காராங்கன்னு கூட பாக்காம நான் செம தூக்கம்.

தூக்கத்துல நான் கை வைக்கற Arm Restல எனக்கும் பக்கத்து சீட்டுகாரர்க்கும் ஒரு சண்டை. சண்டைனா சண்டை இல்ல.அதாவது நான் Arm Restல கைவப்பேன்..ஆனா அவர் நான் வைக்கறத்துக்குள்ள.வைச்சிடுவாரு..இப்படி மாத்தி மாத்தி Arm restக்கு சண்டை போடுறோம்னு தெரியாம போட்ட ஒரு சண்டை.


கடுப்பாகி தூக்கம் முழிச்சுப் பார்த்த ஒரு பையன். சின்னப் பையன் இல்ல என்ன விட ஒரு வயசோ இரண்டு வயசோ குறைஞ்ச பையன், அப்படியே தமிழ் நாட்டு ஜாடை.

நல்லா தூங்கிட்டு இருந்தாரு. ஆனா, என் தூக்கம் தான் தூக்கம் போச்சு. அவர் மேல Slightஅ கோவம் கூட வந்துச்சு. அப்பறம்...அவர் மட்டும் நல்லா தூங்கறாரே.

நான் aisle seat, இவர் Center, அப்பறம் ஜன்னல் பக்கமா Tieயெல்லாம் கட்டிகிட்டு ஜன்னலயும், கொடுத்த தலையணையும் கட்டிக்கிட்டு ஒரு நடுத்தர வயது உடைய ஒருத்தர் தூங்கிட்டு இருந்தார் (அவர் பெயர் மச்சக்காளை, அவர் பெட்டி அடுத்த Flightல் வருதுன்னு Air Hostess சொன்னப்ப note பண்ணினேன்)

அப்பறம் சாப்பாடு ஆரம்பிச்சாங்க...(எங்க அம்மா சின்ன வயசுல நான் 1 standardன்னு நினைக்கிறேன் திட்டனது ஞாபகம் இருக்கு,..வீட்ல எவ்வளவு வித விதமா பண்ணிக் கொடுத்தாலும் வெளி சாப்பிட ஏன் தான் இப்படி திரியிரியோன்னு. சாரிம்மா,.அப்பவும் அது உரயக்கல,..இப்பவும் தான் உரயக்கல. ஏன்னா, எங்கவாது சாட் கடைப் பார்த்துட்டப் போதும் ஏதாவது ஒரு சாட் ஐட்டம் சாப்பிட்டு போனா தான் என் மனசு ஆறும்.)


அப்போ தான் திருவாளர் கண் திறந்தார். நான் இங்க சாப்பாட ஒரு கட்டு கட்டிட்டு இருந்தேன். (அந்த சாப்பாடவான்னு...!!. நீங்க சொல்றது கேட்குது,..சாரி,..நான் சாப்பிடறப்போ யார் என்ன சொன்னாலும் கண்டுக்க மாட்டேன். எதையுமே Full concentrationஒட பணறது என் வழக்கம். அதுக்காக என்ன தின்னிப் பண்டாரம்னு நினைச்சிராதீங்க...டேஸ்ட் பாத்து இதுல உப்பு கம்மி, இது இப்படி, அது அப்படின்னு நொட்ட சொல்ல எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஹி..ஹி..ஹி..)

நானா மனசுல நினைச்சுக்கிட்டேன், இவர்கிட்டல்லாம் பேசக்கூடாதுப்பான்னு. அவர் மறுபடியும் தூங்கப் போய்ட்டார். அப்பறம் என்ன நினைச்சாரோ எழுந்துட்டாரு.

எப்படி ஆரம்பிச்சது தெரில (நான் தான் என் ஓட்ட வாய வச்சுகிட்டு ஏதாவது சொல்லிருப்பேன்)...ஒரே கதை, விவாதம், ...
@ இந்த தலயணை Down featherன்னு ஆரம்பிச்சு
@ நடிகர் சிவகுமார் எப்படி Gentlemanன்னு அவர் சொல்லி,..
@ அப்பறம் காந்தி தன் மகனோட காதல எதிர்த்தாருன்னு நான் சொல்லி,..ஏகப்பட்ட விஷயம் பேசினோம். அவர் மதுரை தான்னு சொன்னார். அப்பறம் email ids exchange பண்ணிக்கிட்டோம்.

அவர் சில நாட்களுக்குப் பின் மறக்காம் email பண்ணார். நான் தான் இந்த மாதிரி விஷயத்துல Firstஅ இருப்பேன். ஆனா அவர் முந்திக்கிட்டார். அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவர் ஒரு நல்ல தோழர்.

வருண் பிறந்ததுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துக்கள்,
எப்பவும் தன்னுடைய மின்னஞ்லில் மறக்காம வருணையும் அவங்க அப்பாவையும் நலம் விசாரிக்கிறது....

அவருடைய தந்தை எதிர்பாராமல் தவறியது,..அவர் உலகம் சுற்றும் வாலிபன் ரேஞ்சுக்கு பல நாடுகளுக்குப் போறதுன்னு...இப்ப சமீபமா அவர் திருமணம்ன்னு (Feb 8th)...Modern technologyல வளருது எங்கள் நட்பு!

அவருக்கும் அப்படியே..இப்படி அருமையான நட்பு அமைந்தது எதிர்பாராதது...
இந்த பதிவு கூட அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் திருமணத்துக்கு இது ஒரு நல்ல பரிசாவும் அமையும்ங்கற நினைப்போட இத பதியுறேன்

( "பதியுறேன்" தமிழ் வார்த்தையா?? :-O தமிழ் விற்பன்னர்கள் என்னை மன்னிக்கவும் :(  தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் உன் கண்ணக் குத்தன்னு சபிச்சிராதீங்க,..சாமியோவ்!)

ஆங்...ஒரு முக்கியமான விஷயம்...நண்பரின் பெயர் ஹரி பாஸ்கர், திருமதி ஹரி பாஸ்கரின் பெயர் கவிதா

"திருமண வாழ்த்துக்கள்! 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!"

சரி,..நட்பப் பத்தி ஒரு விஷயம் சொல்லி முடிச்சுக்கிறேன்
நல்ல நட்பு கடவுள் மாதிரி எல்லா இடத்திலயும் இருக்கு,..அது நம்ம ரஜினி மாதிரி எப்ப எப்படி எங்க வரும்ன்னுலாம் சொல்லமுடியாது.

அப்படி வந்தா, அது சிவாஜி மாதிரி இல்லாமா பாட்ஷா மாதிரி ச்சும்மா ச்சும்மா ச்சுத்தி ச்சுத்தி கலக்கும்...

என்ன வர்ர்ரட்டா?

டி.ஸ்.கி
இந்த பதிவுல என்னைப் பாதித்த பல நண்பர்களப் பத்திச் சொல்லல...அது ஒரு நீண்ட பட்டியல் பள்ளிக்காலத்து பாசமான தோழிகளிலிருந்து ஆரம்பிச்சு..இப்ப நேசமான ஆர்குட்??, FB வரை. அதில் அதிகமாய் இருப்பது ஆண் நண்பர்கள். இத சொல்ல எனக்கு எந்த வித தயக்கமும் இல்ல. நட்புக்கு நல்ல மனசும், நேர்மையும், Integrityயும்(integrityக்கு தமிழ்ல என்ன) தான் தேவை. ஆண், பெண், திருநங்கைன்னு பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது நட்புன்னு நான் நம்பறேன்....அப்போ நீங்க...

Monday, February 23, 2009

அன்பச் சொல்றேன்..அன்பாச் சொல்றேன்!

வாழ்க்கையப் பத்தி தத்துவம் சொல்ல எனக்கு வயசில்ல. ஆனா, நான் ரசிக்கிற இந்த வாழ்க்கைய பத்தி சுவாரசியமா... கொஞ்சமாய் தமிழ் வரும்ங்கர தைரியத்துல சொல்ல முயலுகிறேன்.


தூயத் தமிழ்ல சொல்லாம. கொஞ்சம் அப்படி, இப்படி, பேச்சுத்தமிழும், ஆங்கிலமும் கலந்து கட்டி கூட்டாஞ்ச்சோறு ஊட்ட வாரேன். வாங்க! ஒரு உருண்டை வாங்கிக்கங்க... :)

நான் இந்த வாழ்க்கையில அன்பத் தவிர ரொம்ப அதிசயமான விஷயத்த இன்னும் பாக்கலீங்க.
அன்பக் கொடுங்க, உங்களுக்கு இன்னும் பல மடங்க திருப்பிக் கிடைக்கும்ன்னு பொய் சொல்ல மாட்டேனுங்க. எப்பாவாது கிடைக்கலாம்...ரொம்ப நேரம் கிடைக்காது...

ஆனா, எந்த நிலையிலும் "அன்ப தந்த நீங்க" நிம்மதியாவும் சந்தோசமாவும் இருப்பீங்க...

அட நிஜமாத்தேன் சொல்றேன்..!

சரி...நாலறிவு உள்ள ஜீவன்லருந்து ஆரம்பிக்கிறேன் (ஆமா..செடியெல்லாம் நாலறிவு தான? )


சரி, எல்லாரும் மேல பாருங்க.. (ப்ளாஷ்பேக்)


அப்ப நான் கல்லூரி முடிஞ்சு வீட்ல இருந்தேன். எங்க வீட்டுக்கு முன்னாடி, ஒரு மஞ்ச பூ பூக்கும் செடின்னு சொல்லி ஒண்ணு வைச்சிருந்தாங்க அம்மா, 4 வருஷமா...

செடி தள தளன்னு வளந்திருட்ட்ச்சு. ஆனா, பூவே இல்ல.

அன்னைக்குன்னு பார்த்து கீர விக்க வந்த அண்ணன் அம்மாக்கிட்ட
"என்ன செடிக்கா இது,..இவ்வளவு அழகா இருக்கே..பச பசேலுன்னு" சொன்னார்.

அம்மா "எங்க..பூ தான் பூக்க மாட்டேங்குத்துன்னு" சொன்னான்ங்க வருத்தமா.
"வேர் ரொம்ப ஆழம் ரொம்ப போறதுக்குள்ள வெட்டிருங்கக்கான்னு" அவரு வேட்டு வச்சிட்டு போய்ட்டார்.

எனக்கா வருத்தாமாப் போச்சு.


சரின்னு..தினம் தண்ணி ஊத்தறப்போ அது கிட்ட பேச ஆரம்பிச்சேன்,..
காலைல பேசுவேன்...சாயங்காலம் பேசுவேன்,..சமயத்துல மாடிக்குப் போற படிக்கட்டுல விழுற அது கிளையா மடில வச்சிக் கொஞ்சி கதை பேசுவேன்.

அது கிட்ட சொல்லுவேன்
"ஹேய்..நீ பூ பூத்தா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா...இல்லைனா..உன்ன வெட்டிப் போட்டுருவாங்கப்பா. சொல்லிட்டேன்னு!" ஆரம்பிட்ச்சு..ஏதேதோ பேசுவேன்..


அப்பறம் 3 வாரத்துல சென்னைக்குப் போய்ட்டேன். 1 மாசம் கழிச்சு திரும்பி வந்து பார்த்தா...வந்து பார்த்தா...ஒரு பச்ச இலை கூட தெரியாமா செடியெல்லாம் அத்தனை மஞ்சப் பூ...

நிஜமாத்தான் சொல்றேன்...நிஜம்ம்ம்ம்ம்மா!!!

எங்க அம்மா என் கதைய நம்பல. அப்பா மட்டும் தான் நம்பினாங்க. எங்க பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுகாரங்கெல்லாம் அந்தச் செடி விதை வாங்கிப் போட்டாங்க...எல்லா வீட்லயும் உடனே பூத்திருட்ச்சு.

அப்பறம்,.. நான் தான் இன்னும் பல நூறு வருஷதுக்கும் சேர்த்து அதுக்கு அன்பச் சொல்லி அனுப்பிருக்கேனே..பூக்காதா பின்னே?

ம்ம்ம்..சொல்ல மறந்துட்டேனே...அம்மாவும் நம்பினாங்க. எப்படியா?

எனக்கு ஒரு டெஸ்ட் வச்சாங்க. கிராமத்துல இருந்து கன்னு கொண்டு வந்து வச்ச காய்ககாத, எங்க பின் கட்டு அரை நெல்லி மரத்தையும் பேசியும் தடவிக்கொடுத்தும் நான் காய்க்க வச்சப்போ. :)

நிஜமா..அன்பு மட்டும் தாங்க நிதர்சனம்!!! நம்புறீங்களா ?

எனக்குத் தெரியும் உங்க கிட்டயும் அன்பச் சொல்ற ஒரு
ஒரு சின்னக் கதை இருக்குன்னு....யோசிச்சுப் பாருங்க :)


"அந்த கரையில்

புரளும் அலை போல் தான்

என் அன்பும்..



தொட்டு விட போவதாய்

எண்ணி எண்ணி ஓடி வருவேன்..


இன்னமும் தூரமாய் விலகும்

கரையினை நோக்கி



ம் ஹும்....விடமாட்டேன்...

இன்னும் ஓயாமல் வீசுவேன்

அதிவேக அன்பு அலைகளை"