Monday, February 23, 2009

அன்பச் சொல்றேன்..அன்பாச் சொல்றேன்!

வாழ்க்கையப் பத்தி தத்துவம் சொல்ல எனக்கு வயசில்ல. ஆனா, நான் ரசிக்கிற இந்த வாழ்க்கைய பத்தி சுவாரசியமா... கொஞ்சமாய் தமிழ் வரும்ங்கர தைரியத்துல சொல்ல முயலுகிறேன்.


தூயத் தமிழ்ல சொல்லாம. கொஞ்சம் அப்படி, இப்படி, பேச்சுத்தமிழும், ஆங்கிலமும் கலந்து கட்டி கூட்டாஞ்ச்சோறு ஊட்ட வாரேன். வாங்க! ஒரு உருண்டை வாங்கிக்கங்க... :)

நான் இந்த வாழ்க்கையில அன்பத் தவிர ரொம்ப அதிசயமான விஷயத்த இன்னும் பாக்கலீங்க.
அன்பக் கொடுங்க, உங்களுக்கு இன்னும் பல மடங்க திருப்பிக் கிடைக்கும்ன்னு பொய் சொல்ல மாட்டேனுங்க. எப்பாவாது கிடைக்கலாம்...ரொம்ப நேரம் கிடைக்காது...

ஆனா, எந்த நிலையிலும் "அன்ப தந்த நீங்க" நிம்மதியாவும் சந்தோசமாவும் இருப்பீங்க...

அட நிஜமாத்தேன் சொல்றேன்..!

சரி...நாலறிவு உள்ள ஜீவன்லருந்து ஆரம்பிக்கிறேன் (ஆமா..செடியெல்லாம் நாலறிவு தான? )


சரி, எல்லாரும் மேல பாருங்க.. (ப்ளாஷ்பேக்)


அப்ப நான் கல்லூரி முடிஞ்சு வீட்ல இருந்தேன். எங்க வீட்டுக்கு முன்னாடி, ஒரு மஞ்ச பூ பூக்கும் செடின்னு சொல்லி ஒண்ணு வைச்சிருந்தாங்க அம்மா, 4 வருஷமா...

செடி தள தளன்னு வளந்திருட்ட்ச்சு. ஆனா, பூவே இல்ல.

அன்னைக்குன்னு பார்த்து கீர விக்க வந்த அண்ணன் அம்மாக்கிட்ட
"என்ன செடிக்கா இது,..இவ்வளவு அழகா இருக்கே..பச பசேலுன்னு" சொன்னார்.

அம்மா "எங்க..பூ தான் பூக்க மாட்டேங்குத்துன்னு" சொன்னான்ங்க வருத்தமா.
"வேர் ரொம்ப ஆழம் ரொம்ப போறதுக்குள்ள வெட்டிருங்கக்கான்னு" அவரு வேட்டு வச்சிட்டு போய்ட்டார்.

எனக்கா வருத்தாமாப் போச்சு.


சரின்னு..தினம் தண்ணி ஊத்தறப்போ அது கிட்ட பேச ஆரம்பிச்சேன்,..
காலைல பேசுவேன்...சாயங்காலம் பேசுவேன்,..சமயத்துல மாடிக்குப் போற படிக்கட்டுல விழுற அது கிளையா மடில வச்சிக் கொஞ்சி கதை பேசுவேன்.

அது கிட்ட சொல்லுவேன்
"ஹேய்..நீ பூ பூத்தா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா...இல்லைனா..உன்ன வெட்டிப் போட்டுருவாங்கப்பா. சொல்லிட்டேன்னு!" ஆரம்பிட்ச்சு..ஏதேதோ பேசுவேன்..


அப்பறம் 3 வாரத்துல சென்னைக்குப் போய்ட்டேன். 1 மாசம் கழிச்சு திரும்பி வந்து பார்த்தா...வந்து பார்த்தா...ஒரு பச்ச இலை கூட தெரியாமா செடியெல்லாம் அத்தனை மஞ்சப் பூ...

நிஜமாத்தான் சொல்றேன்...நிஜம்ம்ம்ம்ம்மா!!!

எங்க அம்மா என் கதைய நம்பல. அப்பா மட்டும் தான் நம்பினாங்க. எங்க பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுகாரங்கெல்லாம் அந்தச் செடி விதை வாங்கிப் போட்டாங்க...எல்லா வீட்லயும் உடனே பூத்திருட்ச்சு.

அப்பறம்,.. நான் தான் இன்னும் பல நூறு வருஷதுக்கும் சேர்த்து அதுக்கு அன்பச் சொல்லி அனுப்பிருக்கேனே..பூக்காதா பின்னே?

ம்ம்ம்..சொல்ல மறந்துட்டேனே...அம்மாவும் நம்பினாங்க. எப்படியா?

எனக்கு ஒரு டெஸ்ட் வச்சாங்க. கிராமத்துல இருந்து கன்னு கொண்டு வந்து வச்ச காய்ககாத, எங்க பின் கட்டு அரை நெல்லி மரத்தையும் பேசியும் தடவிக்கொடுத்தும் நான் காய்க்க வச்சப்போ. :)

நிஜமா..அன்பு மட்டும் தாங்க நிதர்சனம்!!! நம்புறீங்களா ?

எனக்குத் தெரியும் உங்க கிட்டயும் அன்பச் சொல்ற ஒரு
ஒரு சின்னக் கதை இருக்குன்னு....யோசிச்சுப் பாருங்க :)


"அந்த கரையில்

புரளும் அலை போல் தான்

என் அன்பும்..



தொட்டு விட போவதாய்

எண்ணி எண்ணி ஓடி வருவேன்..


இன்னமும் தூரமாய் விலகும்

கரையினை நோக்கி



ம் ஹும்....விடமாட்டேன்...

இன்னும் ஓயாமல் வீசுவேன்

அதிவேக அன்பு அலைகளை"

4 comments:

  1. ஐயோ ...ஆரம்பமே அன்பு மழையா இருக்கு...அசத்தலா இருக்கு...

    செடிகள் கூட பேசுறது நான் கூட நிறைய தடவை பண்ணிருக்கேன்.....

    ரொம்ப அழஅகா எழுதி இருக்குறீங்க தேவி.....தொடரட்டும் பதிவர் பணி...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நீங்களும் செடிக் கூட பேசுவீங்களா...ஹை...அட நம்ம செட்டு

    ReplyDelete
  3. உங்கள் பதிவில் உள்ள உண்மையை பலமுறை உணர்ந்து இருக்கின்றேன். நல்ல பதிவு.

    :)

    ReplyDelete

வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்