Thursday, April 26, 2012

ஒரு கண்ணாடி, ஒரு கட்டில்...


என் அறையில்...
கண்ணாடியும், கட்டிலும்
உன்னைப் பற்றி புரணி பேசிற்று...

“எனக்கு கையிருந்தால்
 கண்களை மூடிக் கொள்வேன்
இவன் கொட்டம் தாங்க வில்லை

“ம்ம்க்கும்......
 எனக்கு கால் இருந்து என்ன பயன்?
 ஓட முடியவில்லையே...!!!” :-(

அமர்க்களம் செய்கிறாயேடா...!!!