Friday, February 8, 2013

இது..?அது..?எது..?







உன் பிரியங்கள்
ஒளிந்து...உள்ளார்ந்து...
ஒளிரச் செய்கின்றது
என் முகத்தை..!

எப்படிப் புரிய வைப்பேன்?
பயத்தப் பருப்பு மாவா?
இல்லை
ஃபேர் & லவ்லியா..?
எனக் கேட்ட தோழியிடம்!

Thursday, February 7, 2013

சிதறல்...!



















உனக்கான காதலில்,
என் கவிதைகள்..
சில சமயங்களில் வைரத் துகள்களாகவும்,
பல நேரத்தில் கண்ணாடித் தூசியாகவும்
சிதறுகிறது பார்..ஒளியில்...!

Wednesday, February 6, 2013

ஆசிர்வதிக்கப்பட்ட இரவு...!



அடை மழை இரவு...!
காத்திருந்தது போல மின்வெட்டு...!

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், ஒரே புத்தகத்தை
நீ ஒரு பக்கம்,
நான் ஒரு பக்கம்
என முறைப் போட்டுப் படித்தோம்...

ஆசிர்வதிக்கப்பட்ட அந்த இரவில் நடந்த
அத்தனையும் நினைவிருக்கிறது...
புத்தகத்தில் படித்த கதை தவிர!