அடை மழை இரவு...!
காத்திருந்தது போல மின்வெட்டு...!
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், ஒரே புத்தகத்தை
நீ ஒரு பக்கம்,
நான் ஒரு பக்கம்
என முறைப் போட்டுப் படித்தோம்...
ஆசிர்வதிக்கப்பட்ட அந்த இரவில் நடந்த
அத்தனையும் நினைவிருக்கிறது...
புத்தகத்தில் படித்த கதை தவிர!
Hi.. you write beautifully.. :) :)
ReplyDeletemy best wishes !!!
<3