Wednesday, February 24, 2010

உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக............

உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக.....................................
அப்படின்னு உங்களுக்கெல்லாம் ஒரு சேதி சொல்ல ஆசை.

வேறொண்ணுமில்லீங்க நம்ம சன் டீவில செஃப் ஜேக்கப் வழங்குற "ஆகா, என்ன ருசி"ன்னு ஒரு சமையல் நிகழ்ச்சியில நான் லோக்கல் கிச்சன்ங்கற பகுதில மூணு ஷோ பண்ணிருக்கேன்.

அதுல முதல் ஷோ இந்த வாரம் ஒளிப்பரப்பாகுது (Feb 27, Saturday 1.00 P.M.). மறக்காம பாருங்க.

செஃப் ஜேக்கப் சொதப்பல் ஷாட்ஸ்ன்னு நிகழ்ச்சி கடைசில போடுவாரு. எனக்கு மட்டும் அது கிடையாது, ஏன்னா மொத்தமாவே என் ஷோ அப்படித்தான் இருக்கும்.



சரி, இப்ப உங்களுல எத்தனை பேரு "சாமி அன்னைக்கு கரண்ட் கட்டாகணும்னு வேண்டுறீங்களோ தெரில!" :-).

கரண்ட் கட்டாகதவங்களுக்கு வேற வழியில்ல. தலையெழுத்த மாத்தமுடியுமா சொல்லுங்க. :-p :-))

அப்போ நான் வாரேன்ன்ன்ன்ன்....

Saturday, February 20, 2010

காதல்,...

காதல் பத்தி எழுதனுமுனு ரொம்பா நாளா ஆசை,...
என்னவோ சரியான தருணமோ, அதற்கான ஒரு மன நிலையோ அமையாத நிலையில் இப்போ காதல கொண்டாடற இந்தக் குட்டி மாதத்துல, காதலர்களும், காவலர்களும் மட்டும் விழித்துக் கிடக்கும்,
ஒரு முன் பனி பெய்யும் பொழுதுல இந்த பதிவ எழுதுறேன்....

காதல பத்தி நான் அறிஞ்சத, புரிஞ்சத சொல்றேன்,....கொஞ்சமா


"காதல்ன்னா என்னம்மான்னு?" என் தங்கை அம்மா கிட்டக் கேட்டா தோட்டாத்தில பூச்செடிக்கெல்லாம் நீர் பாய்ச்சிக்கிட்டே,...பதின்வயசுல அந்தக் கேள்வி யாரையும் திடுக்கிட்டிருக்கும், ஆனா அப்படி எதுவுமே இல்லாமா அம்மா சொன்னாங்க "காதல்ங்கறது நிறையா பாசம், அன்பு"ன்னு

காதல்ங்கறது இனகவர்ச்சிய தாண்டிய அன்புங்கறத ரொம்ப எளிமையா சொல்லிட்டாங்கல. மாடில இவங்க சம்பாஷணை கேட்ட(ஒட்டுக் கேட்ட) நினைவு இன்னும் பதிந்துக் கிடக்கு பசுமையாய்.

என்னவோ தெரில, காவியங்களும், கதைகளும் காதலுக்காக உயிர் துறந்த காதலர்களைத் தான் கொண்டாடுகிறது. சினிமாவுல கூட காதலர்கள் கை சேர்ந்தப் பின், எல்லாரும் குடும்பமா ஹா ஹான்னு சிரிச்சு ஒரு ஸ்டில் புகைப்படத்தோட "வணக்கம்" போட்டுறாங்க.

என்கென்னவோ, மெய்ன் பிக்சரே அதுக்குப்பின் தான் ஆரம்பம்ன்னு தோணுது. கண்ணால பேசுறது(இன்னும் இது வழக்குல இருக்கா??), படப்படப்பா தவிக்கிறது, கை பட்டுட்டா சிலிர்க்கிறது, செல்லச்சண்டை போடுறது எல்லாம் சும்மா ட்ரைலர்.

இருந்தாலும் சில பேருக்கு அந்த ட்ரைலர் செம நச்சின்னு அமைஞ்சு போகுது.
அப்போ
அருவியா கொட்டற வசனங்களும்,....
வார்த்தைகள் எட்டாமல் முட்டும் அந்த கவிதைகளும்,....
கலர் கலராய் (அவதார் படம் தோத்திடும் போங்க) தோணும் கனவுகளும்...
காதலர்களுக்கு மாயாஜால உலகை கையில கொண்டு வந்திருது.

சும்மாவா சொன்னார் வைரமுத்து வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு FANTASYன்னு.

இதுல எனக்கு மிகவும் பிடித்தவங்க ஒரு தலை காதலர்கள் தான்! சொல்லாம தவித்து, மென்னு, முழுங்கி, கனவுல உழன்று, நினைவு வெளில திரிந்து, "பிடிக்குமா" "பிடிக்காதா"ன்னு பித்துப் பிடித்து அலைந்து, சிலசமயம் காலம் தாழ்த்தினாதால கைச்சேராமப் போய், கலங்கி, சோர்ந்து ஆனாலும் அப்பவும் சிரிச்சிக்கிட்டே "கங்கிராட்ஸ்" சொல்லும் ஒரு அழகு, அற்புத மனிதர்கள்.

சரி,..இன்னும் விரிவா காதல, எனக்கு தெரிந்த சில காதல் கதைகள இன்னொரு ஒரு பதிவுல.

இந்த பகுதில எனக்குப் பிடித்த சில அழகுக் கவிதைகள் தாரேன்,.. இவங்கள்ள பல பேர உங்களுக்கு அறிமுகப்படுத்தறதுல எனக்கு சந்தோஷம். தபு சங்கரோ, தாமரையோ இல்ல,..ஆனா அவங்களுக்கு இவங்க சளைச்சவங்க இல்ல. படிச்சுத்தான் பாருங்களேன்.

"என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................"
- புதியவன்
http://puthiyavanonline.blogspot.com/2009/06/blog-post.html


"பிடித்தப் பாடலும்
வாத்தியங்களின் சத்தமாய்;
அடுத்த வீட்டுக்குழந்தை
அழுகையின் உச்சமாய்;
கண்மூடும் நேரம்
இமைகளும் முட்களாய்;
நாளேடுகளின்
விரும்பாத செய்தியாய்;
உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!"
- ஸ்ரீமதி
http://karaiyoorakanavugal.blogspot.com/2009/03/blog-post_16.html


"நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா.."
- சரவணக்குமார்
http://msaravanakumar.blogspot.com/2008/09/blog-post_07.html


"பனிரெண்டு மணி தாண்டி
அரைத்தூக்கத்தில் வாழ்த்துச்
சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில்
நான் தூங்குவதே இல்லை என்பதை
உன்னிடம் எப்படி சொல்வது"
- ச.பிரேம்குமார்
http://premkumarpec.blogspot.com/




நீயில்லா நாட்களை
புகைப்படங்களும்
குறுஞ்செய்திகளும்
நிரப்புகின்றன...
நானில்லா உன் நாட்களை
எவை நிரப்புகின்றன?
- புனிதா
http://ninaivellam.blogspot.com/2009/06/ii_15.html

சரி நானும் ஒரு கவிதை சொல்றேன் கேட்டுத்தான் ஆகணும்.


உனக்காய் காத்திருந்து
அலுத்து, சலித்து, கோபித்து
பல வாறு சொல்லித் திட்ட பழகி
கொஞ்சமாய் அழுது
தலையணை நனைத்து, உறங்கி
நீ
வந்தவுடன் கேட்டேன்
"சாப்பிடீங்களா..."

என்ன பிடிச்சிருக்கா,..? பிடிக்கலைன்னாலும் ஓண்ணும் பண்ண முடியாது, அட்ஷட் பண்ணிக்கோங்க :))

அப்போ வ்ர்ர்ர்ட்டா,..அடுத்த பதிவுல சந்திப்போம்,..
காதலை, காதலர்களை வரையறை இல்லாமல்
காதலிக்கும்
உங்கள் சினேகிதி

Friday, May 29, 2009

மன்னிப்பு...Sorry..Excuse Me...

  • ஹே,..மன்னிச்சுக்கோப்பா
  • சாரி,..... :-(((
  • தெரியமாச்செய்துட்டேன்...நிஜம்மா
  • மாப்பு கேட்கறேங்க
  • சாரி கேட்டோ.. (மலையாளம்)
  • ஷெமிக்கு..........(மலையாளம்)
  • சாரியண்டி........(தெலுங்கு....நமக்கு தலைவர் சொன்ன "இப்புடுச் சூடு"க்கு மேல தெலுங்கு தெரியாது :-)
  • பகுத் சாரி.... .....(ஹிந்தில சாரிக்கு என்ன? "ஷுகிரியா?" "தன்யவாத்"? ஹி.. ஹி ,..மே நோ ஹிந்தி ஆத்தா ஹை! :))) )
என்னடா,..திடீர்ன்னு மன்னிக்கச்சொல்றாளேன்னு நீங்க டெரர் ஆகிறது தெரியுது. அதுக்கு முன்னால ஏன் இப்படி ஒரு தலைப்புல பதிவு போட தோணுச்சுன்னா...ஏன் தோணுச்சுன்னா..?அச்சட்ச்சோ ...எப்படி தோணுச்சு.:-(,..சும்மா மானவாரியா அப்படியே ரோசிச்சப்ப இப்படி தோணுச்சுன்னு கதை சொல்ல மாட்டேன்,..இது ரொம்ப நாள ஓடிட்டு இருந்த ரோசனை தான். (ஆமா,..நாங்களும் சிந்திப்போம்லா..:-)


சரி விஷயத்துக்கு வாரேன்.

இப்ப யார பார்த்தாலும்,....
  • "இந்த வாழ்க்கை ரொம்ப டென்ச்னா இருக்கு,.."..
  • "டைம் இல்ல,."..."ரொம்ப வேலை,..".
  • "செம கடியா இருக்கு,..".."ஆபிஸ்ல ரப்ச்சர் தாங்க முடியல,.."...
  • "சே! இதுக்கு "நான் கடவுள்" ருத்ரன் மாதிரி "அஹம் பிரம்மாஸ்மி"ன்னு போகலாம் (ஆனா,அதுக்கு முடி நீளமா வளர்க்கணும்.அப்பறம் டை வேற அடிக்கணும் :-) )",..
  • "என்ன உலகம் அங்க கொல்றாங்க,..இங்க சுருட்றாங்க,.அது,..இதுன்னு,..."
இப்படி, நம்முடைய வருத்தங்களுக்கு பல வித காரணம் சொல்றதுக்கு முன்னால...உண்மையான ஒரு காரணத்த சொல்லுவோமா...?

அதாவது நமக்கே தெரியாத "அந்த" ஒரு காரணத்த சொல்லுவோமா? "நான் என் வாழ்க்கைல சில, பல பேர்களை மன்னிக்கல!..அவங்க செய்தத மறக்கல" அப்படீங்கற காரணத்த.

என்னது,...மன்னிப்புக்கும் மனுஷ தினசரி வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்" ங்றீங்களா? இருக்கே..... எனக்கு தெரியுமே...ஆமா..நானே கண்டுபிடிச்சேன். ")))

"வந்துட்டாய்ய உளவியல் நிபுணரு,..காசு வாங்காமா கன்சல்டிங்க் பண்ண"ன்னு கிண்டல் பண்றவங்களுக்கு நான் பணிவ சொல்றதெல்லாம் இது தாங்க. நான் என் வாழ்க்கைல கஷ்டம் தந்த முக்காவாசி பேர மன்னிச்சிட்டேன்,..மிச்ச காவாசி பேர மறந்துட்டேன்....(சாமி புண்ணியத்துல இப்ப எனக்கு கூட இருக்கிறவங்களெல்லாம் நல்லவங்க தான் :))

இப்பக் கூட சில பேர் சொல்லலாம் "ஓ,..இப்படிக் கூட தன்ன பத்தி பெருமையா தம்பட்டம் அடிச்சிக்க முடியுமான்னு". அவங்களுக்கு நான் சொல்ற்தெல்லாம் "அன்புடையீர்,.தினம் தினம் சமைக்கிறோம்,..வெங்காயம் வதக்கிறப்போ,..அந்த பதார்த்ததுக்குத் தேவையான உப்பப் போட்டு வதக்கினா சீக்கிரம் வெங்காயம் வெந்திடுமுன்னு தெரிஞ்சா நாம நாலு பேருக்கு சொல்ல மாட்டோமா...? சொல்லுங்க? நான் சொல்லுவேன்பா...:-) ( வெங்காயத்த வதக்கிறப்பல்லாம் என்ன நினைச்சாலும் நினைச்சுப்பாங்க..:)

சரி சரி மன்னிக்க வருவோம்...
வாழ்க்கை ரொம்ப சீக்கரம் சீக்கரம ஓடிக்கிட்டு இருக்கு. இல்ல, இல்ல பறந்துகிட்டு இருக்கு. இதுல சும்மா தேவை இல்லாம வருத்தத சுமந்துகிட்டு. சந்தோஷமா இருக்கத் தான வாழ்க்கை? கடவுள் எவ்வளவு ரசிச்சு, ரசிச்சு இந்த உலகத்த, உங்கள படைச்சிருக்கார், "என்ஜாயா போடுறத விட்டுட்டு" சும்மா,..ஏன் மத்தவங்க நமக்கு பண்ண தப்பையே நினைச்சு நம்மளேயே நாம ஏன் தண்டிக்கனும் சொல்லுங்க?

"REVENGE IS SWEET"ன்னு சொன்னவன்னு மன்னிக்க பழகிருந்தா என்ன சொல்லிருப்பார் தெரியுமா? "FORGIVING IS BLISS"ன்னு :-)


இந்த உலகத்துல புதுசா வரப் போற பிரச்சினையின்னு எதுவுமேயில்ல. எல்லா பிரச்சனையும் ஏற்பட்டாச்சு. எல்லாத்துக் குரிய தீர்வுகளும் கண்டுபிடிச்சாச்சு..அதுல ஒரு அருமையான தீர்வு "மனுஷன் சந்தோசமா இருக்க தேவை மன்னிக்கும் மனப்பான்மை".

2000 வருஷத்துக்கு முன்னாலயே, ஏசு சாமி என்ன சொன்னாரு "ஒருத்தன் ஒரு கன்னத்துல அடிச்சா இன்னொரு கன்னத்த காண்பி"ங்கறாரு. மன்னிச்சிரு,..ஒரு சான்ஸ் கொடுன்னு சொல்றாரு.

மனசத் தொட்டு சொல்லுங்க "உங்கள யாரோ, இப்ப நீங்க கூட, மன்னிக்க முடியாத விஷயத்த மன்னிச்சிருக்காங்க தானே?"...ஹேய்,..பொய் சொல்லக் கூடாது,....:-)
அப்போ ...சின்ன வயசுல...அந்த சம்பவம்,..ஞாபகம் வருதா...? நல்லா யோசிங்க வரும் வரும்.. :-)))

சரி இவ்வளவு சொல்லியும் புரியலைன்ன,..நம்ம உலக நாயகன் கமல் விர்ர்ர்ர்ர்ருமாண்டீல சொன்னத சொல்றேன்,..
"மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன் (மன்னிப்பு கேட்கறவன் பெரிய மனுசன் (இல்ல வீரன் :))))

மன்னிச்சு எல்லோரும் மனுசனாவோம்,..வாங்க :-)))

(முடியாதுன்னு பின்னூட்டம் போடறவங்களெல்லாம்,..ஏலியன்ஸ் :( )

தப்பா ஏதாவது சொல்லிருந்தா மன்னிச்சிப்போட்டுருங்கண்ணா..வாரேன்ன்ன்!!!

டி.ஸ்.கி
மன்னிப்பத் தவிர இன்னொரு விஷயம் வாழ்க்கைய சுவாரசியம் ஆக்குமே, :-)அது என்ன..?
அது தாங்க, பாதி கோலிவுட் படத்தோட கதை அவுட்லைன்... YES,..பரத் சந்தியா நடிச்ச மேட்டர்...ம்ம்..கரெக்ட்,..காதல் ....(ஊய்,...ஊய்...நீங்க சீட்டி அடிக்கிறது கேட்குது,...ஆனா,..அது இன்னொரு பதிவுல :)))

Sunday, May 10, 2009

அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

வலையுலக அம்மாக்களுக்கு என்னுடைய மனமார்ந்த "அன்னையர் தின வாழ்த்துக்கள்"

Wednesday, April 22, 2009

யார் ஹீரோ,..

நல்ல வேளையா,..அன்பு நண்பர் வாசன் அந்த புகைப்படத்தில் இருப்பது யாருன்னு கண்டுபிடிச்சார்...ஏன்னா யாரும் கண்டுபிடிக்காத வரைக்கும் நான் அடுத்த பதிவு போடக்கூடாதுன்னு வச்சிருந்துதேன்..


நான் என்ன சொல்ல வந்தேனா...நாம எவ்வளவு மெனக்கிட்டு சினிமா பிரபலங்களோட வாழ்க்கை வரலாற தெரிஞ்சி வச்சிருக்கோம்,...ஆனா "நான் ஒரே ஒரு கடவுளைத் தான் வணங்குகிறேன்,..அதன் பெயர் அன்பு"ன்னு சொன்ன அந்த பாசாமான தாயைப் பத்தி எத்தனை பேரு தெரிஞ்சி வைச்சிருக்கோம்.



பார்த்திபனின் கிறுக்கல்கள் புத்தகத்துல அன்னையப் பற்றி ஒரு சின்ன கவிதை உண்டு. சரியா ஞாபகம் இல்ல இருந்தாலும் இப்படித் தான் பொருள் பட சொல்லும்

"என்னை மட்டும் கருவில் கொண்டதால் அவள் எனக்கு அன்னை
நீ
அன்பை கருவில் கொண்டதால் உலகிற்கே அன்னை"

உண்மையிலே அவர் கவிதையின் கடைசி வரி முத்தாய்ப்பா முடியும். ஞாபகம் இல்லாததால் அந்த டச் கொண்டு வர முடியல

அன்னை 12 வயதுலேயே ஒரு அழகான கனவு மற்றும் கையில் 3 வெள்ளிகளை வைத்துக் கொண்டு சொன்னார்களாம்." எனக்கொரு கனவுண்டு,..இந்த உலகில் ஏழை எளியோரைக்கு பணிவிடை செய்யும்/காக்கும் கனவு" என்று. அப்போது அவரை எள்ளி நகைத்தவரிடம் மிகத் தெளிவாக மிக கனிவாக சொன்னாரம் "கனவு என்னுடையது அதை நிறைவேற்றும் கடமை ஆண்டவர்க்குரியது, அவர் துணையுடன் என் கனவைச்செவ்வனே செய்து முடிப்பேனேன்று."

அன்னைஅவர்கள் அல்லவா உண்மையான ஹீரோயின் . பல் துலக்க பன்னீரும், குளிக்க பிஸ்லரியும் கேட்கும்,..டாக்டர் ஆகிருப்பேன்,..கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சிருப்பேன்னு பீலா விடும் ஹீரோயின் ஹீரோக்களின் துதிகளை எப்போது விடுவோம்.

ஹீரோவின் விளக்கம் என்ன தெரியுமா "ஒருசாதரண மனிதன் அசாதரணக் காரியத்தை(நல்ல) செய்ய விழையும்/துணியும் போது ஹீரோ ஆகிறான். "

ஆமானுஷ்ய சக்திகள் படைத்தவனல்ல ஹீரோ,..அவன் காமிக் புக்குகளில் ஸ்பைடர் மேனாகவும், மாயாவியாகவும், சூப்பர் மேனாகவும் குழந்தைகளுக்கு பூச்சாண்டிக் காட்டிக் கொண்டுருப்பவன்.

அன்னையைப் போல இன்னும் பலர் தாம் வாழ்வின் உண்மையான ஹீரோ!!!

இவர்களைப் பற்றி நாம் எப்போது இளையவர்களுக்கு சொல்லித்தரப்போறோம்...இல்லை நமக்குச்சொல்லும் அளவுக்குத்தான் இவர்களைப் பற்றித்தெரியுமா?

குழந்தைகளுக்கு ரோல் மாடல்களை வெளியில் தேடுவானேன் நாமே ஏன் ஒரு ஹீரோவாகாக் கூடாது,....?

Sunday, April 5, 2009

நாலும் தெரிஞ்சவங்களா நீங்க? நிஜமா..

நாலும் தெரிஞ்சவங்களா நீங்க? நிஜமா..அப்ப ஒரு சவால்

இந்தப் படத்துல இருக்கிறக் குட்டிப்பாப்பா யாருன்னு தெரியுமா ?


இப்ப

உலக அழகின்னு ஆரம்பிச்சிச்சு,..இப்ப இயந்திரன்ல அவங்க வாங்கற சம்பளம் வரைக்கும் தெரியும் தான
``````````````````````````````````````````````````````````


இவரு,...முகஜாடை மாறவேயில்ல இல்ல..அப்பாவக் கொண்டு வந்துருக்கார்ன்னு நினைக்கிறேன். இவர் கதையும் புட்டு புட்டு வப்பீங்க
``````````````````````````````````````````````````````````
இவரு...?


இவரால நம்மூர்ல பாதி பசங்க ஜிம்ல தான் கிடக்குறாய்ஙே. ..சட்டில இருந்தா தானே அகப்பையில வரும்னு யாருக்கு தெரியுது..என்னவோ போங்க
``````````````````````````````````````````````````````````

இவங்க வடக்கு தெற்குன்னு பாரபட்சமில்லாம எல்லா மனச கொள்ளயடிச்சிட்டுப் போன கஜோல்ன்னு கரீக்கட்டா சொல்லிருப்பீங்க
``````````````````````````````````````````````````````````

இவங்க ஓம் சாந்தி ஓம்ல வந்து பசங்க மனசாந்தியக் கெடுத்தவங்க. மத்த விவரமெல்லாம் விரல் நுனியில்ல வச்சிருப்பீங்களே :))
``````````````````````````````````````````````````````````
இவங்க ??

தெரியலையா,...? நானே சொல்றேன். கத்ரினா. சரி சரி...இப்ப உங்களுக்கு இவங்க லேட்டஸ்ட் பாய் ஃப்ரண்டு விஷயம் வரைக்கும் தெரியுமே :))
``````````````````````````````````````````````````````````
இவங்க..?

சரியா சொல்லீட்டீங்க,..த்ரிஷா தான். இவங்க அப்பா அம்மா பேரு ஊரு எல்லா மேட்டரும் சொல்வீங்க
``````````````````````````````````````````````````````````
இதெல்லாம் ஒ.கே.. இவங்க யாருன்னு சொல்லுங்க.. நீங்க பெரிய கில்லாடின்னு ஒத்துக்கிறேன்

Friday, March 13, 2009

மொக்கைகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா!

எங்க ஆத்தா, அலமேலு, பொன்னாத்தா..."யக்கோவ்....நம்ம ஏரியா பக்கம் வந்துகினு போறியா,கொஞ்சம் விவகாரம் இருக்கு" அப்பிடின்னு பின்னுட்டம் போட்டப்பவே இது கொஞ்சம் விவகாரம் இல்ல பெரிய விவகாரம்ன்னு, மனசுல மணி அடிச்சது.

ஆலயமணி இல்லிங்க, இது கிலில அடிக்கிற அலார மணி. கிடு கிடுனு போய் பார்த்தா...ஆப்பு அழகாக வைக்கப் பட்டிருந்தது. இது தான் "Passing the ஆப்பா" ?(ஆங்கிலத்துல Passing the Buckன்னு சொல்ற மாதிரி. சண்டக்கோழிக்கிட்ட் சாக்கிரதையா இருக்கணும்ப்பா..)

தொடர் பதிவு போடச் சொன்ன, தங்கமான பொன்னாத்தா!
என்னியெல்லாம் ஒரு ஆளா மதிச்சுக் கூப்பிடத்துக்கு நெம்ப நெம்ப ஸந்தோஸம்!(அவ்வ்வ்..)

மொக்கையா என்ன எழுதலாம்னு...ரொம்ப சிந்திச்சேன்,..ரொம்ப ரொம்ப சிந்திச்சேன், கார் ஓட்டறப்ப் ,..கடிப் போட்ட மீட்டிங்க் நடுவுல,..படுத்துட்டு யோசிச்சேன்,..உட்கார்ந்துட்டு யோசிச்சேன்.

அப்பத் தான் ஒரு உண்மை எனக்கு தோணுச்சு,..என்னையப் பத்தின உண்மை.

நான் வாய தொறந்தா மூடாத கோஷ்டி. இல்ல,..இல்ல.. கோஷ்டிக்குத் தலைவி! :))

என் கதைய சலிக்காம கேட்கற ஒரே ஆளு...என் ஆளு :) ம் ம்ன்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு. (ஆனா நான் சொன்னத திருப்பிச் சொல்லச் சொன்னா,..இஹி இஹின்னு சிரிச்சு மழுப்பிடுவாரு)


அது ஏனோ தெரில, என்ன மாயமோ புரில,
நம்ம பேச்சக் கேட்கற மத்தவைங்க்கெல்லாம் "ஆத்தாடி இது என்ன கலி காலக் கொடுமைன்னு." எஸ் ஆகிருவாங்க :((

போறாங்க போங்க...ஞானிகளின் பேச்சு சாமானியர்களுக்கு புரியாதது தான் (ஆமா,..இப்படியே.. நானே என்னைய உசுப்பேதிக்க வேண்டியது தான் :))

நாமா, இதுக்கெல்லாம் அஞ்சினவங்களா..சொல்லுங்க? சரி, அப்ப நாமளே சீர்யஸா எதையாவது போட்டு விடுவோம்னு நினைச்சப்பா தான் இன்னைக்கு வெள்ளிக் கிழமை ஆனந்த விகடன் வந்திருக்குமேன்னு ஞாபகம் வந்திடுச்சு.

விகடன்ல "டேக் ஓ.கே"ன்னு ஒரு மரணக்கடியா கிஷோர்ன்னு ஒரு கொசு போடுற மொக்கைய விட டபுள் ஸ்ட்ராங்க் இன்ன வரைக்கும் நான் பாக்கலைங்க,..படிக்கலைங்க... அதனால, நான் சொன்னேன்னு விகடன் போய் படிங்க,..சத்தியமா திருப்பி விகடன படிக்க மாட்டீங்க. அப்படி ஒரு கடி!

சரி,..சரி டைம் ஆச்சு. பொன்னத்தா மாதிரி ஒரு மொக்கை கவிஜப் போட்டு முடிக்கிறேங்க (தொண்ட வலின்னு NYQUIL குடிச்சேன் மப்பா இருக்கு)

இன்னா கவிஜ போடலம்?..ம்ம்ம்

ஆங்,..ஆப்பு...மப்பு..
டி.ஆர் மாதிரி மன்னிச்சுக்கோங்க விஜய டி.ஆர் மாதிரி ஒரு கவிஜச் சொல்றேன். (அடுக்கு மொழிக் கவிதை)

அய்யோ,..பாவம்!
(யாரன்னு சொல்றீங்கள..உங்களத்தான் :)) ஹி ஹி )

ஹியர் க்ம்ஸ் த கவிஜ

பொன்னாத்தா Blogல வைச்சாங்க ஆப்பு!
NYQUIL குடிச்சா வரும் மப்பு!
சின்ன வயசுல வச்சு விளையாடினேன் சொப்பு!
அரியர்ஸ்க்கு இன்னொரு பெயரு கப்பு!
Jeansல வச்சாங்க ஜிப்பு!

ரோட் சைட் ரோமியோ தேடுறது பிக்கப்பு!
இவங்களுக்கு நம்மூர்ல இருக்குது லாக்க்ப்பு!
எங்க அப்பாவுக்கு பிடிச்ச பூ குஷ்பூ!
குஷ்பூ கருத்துச் சொன்ன விஷயம் கற்பு!
அதுக்கு கிடைத்தது நல்ல ஆப்பு!

(எப்படி ஆப்பிலேத் தொடங்கி,..ஆப்பிலே முடிச்சிருக்கேன் பாருங்க. சே! கலக்குறேன்ல...என்னவோ தெரிலங்க கடவுள் என்னைய இப்படி சுப்பர்ர்ராப் படைச்சிட்டாரு)

மொக்கை கவி முடிஞ்சாட்ச்சு,...அடுத்து நான் மொக்க போட அழைப்பது

மத்திய மூளையில இருந்து யோசிக்கும் என் கல்லூரித் தோழர் வாசன்
மற்றும் http://vsvasan.blogspot.com/

புதுசா வலையுலகுக்கு மிக ஆர்வத்துடன் பிரவேசித்திருக்கும் இனியப் பள்ளிக் காலத் தோழி பொற்கொடி http://www.nithru.blogspot.com/

வருக! வருக!,.வந்து மொக்கையப் போட்டு ஜோதியில் ஐக்கியமாகவும்!!!