Wednesday, April 22, 2009

யார் ஹீரோ,..

நல்ல வேளையா,..அன்பு நண்பர் வாசன் அந்த புகைப்படத்தில் இருப்பது யாருன்னு கண்டுபிடிச்சார்...ஏன்னா யாரும் கண்டுபிடிக்காத வரைக்கும் நான் அடுத்த பதிவு போடக்கூடாதுன்னு வச்சிருந்துதேன்..


நான் என்ன சொல்ல வந்தேனா...நாம எவ்வளவு மெனக்கிட்டு சினிமா பிரபலங்களோட வாழ்க்கை வரலாற தெரிஞ்சி வச்சிருக்கோம்,...ஆனா "நான் ஒரே ஒரு கடவுளைத் தான் வணங்குகிறேன்,..அதன் பெயர் அன்பு"ன்னு சொன்ன அந்த பாசாமான தாயைப் பத்தி எத்தனை பேரு தெரிஞ்சி வைச்சிருக்கோம்.



பார்த்திபனின் கிறுக்கல்கள் புத்தகத்துல அன்னையப் பற்றி ஒரு சின்ன கவிதை உண்டு. சரியா ஞாபகம் இல்ல இருந்தாலும் இப்படித் தான் பொருள் பட சொல்லும்

"என்னை மட்டும் கருவில் கொண்டதால் அவள் எனக்கு அன்னை
நீ
அன்பை கருவில் கொண்டதால் உலகிற்கே அன்னை"

உண்மையிலே அவர் கவிதையின் கடைசி வரி முத்தாய்ப்பா முடியும். ஞாபகம் இல்லாததால் அந்த டச் கொண்டு வர முடியல

அன்னை 12 வயதுலேயே ஒரு அழகான கனவு மற்றும் கையில் 3 வெள்ளிகளை வைத்துக் கொண்டு சொன்னார்களாம்." எனக்கொரு கனவுண்டு,..இந்த உலகில் ஏழை எளியோரைக்கு பணிவிடை செய்யும்/காக்கும் கனவு" என்று. அப்போது அவரை எள்ளி நகைத்தவரிடம் மிகத் தெளிவாக மிக கனிவாக சொன்னாரம் "கனவு என்னுடையது அதை நிறைவேற்றும் கடமை ஆண்டவர்க்குரியது, அவர் துணையுடன் என் கனவைச்செவ்வனே செய்து முடிப்பேனேன்று."

அன்னைஅவர்கள் அல்லவா உண்மையான ஹீரோயின் . பல் துலக்க பன்னீரும், குளிக்க பிஸ்லரியும் கேட்கும்,..டாக்டர் ஆகிருப்பேன்,..கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சிருப்பேன்னு பீலா விடும் ஹீரோயின் ஹீரோக்களின் துதிகளை எப்போது விடுவோம்.

ஹீரோவின் விளக்கம் என்ன தெரியுமா "ஒருசாதரண மனிதன் அசாதரணக் காரியத்தை(நல்ல) செய்ய விழையும்/துணியும் போது ஹீரோ ஆகிறான். "

ஆமானுஷ்ய சக்திகள் படைத்தவனல்ல ஹீரோ,..அவன் காமிக் புக்குகளில் ஸ்பைடர் மேனாகவும், மாயாவியாகவும், சூப்பர் மேனாகவும் குழந்தைகளுக்கு பூச்சாண்டிக் காட்டிக் கொண்டுருப்பவன்.

அன்னையைப் போல இன்னும் பலர் தாம் வாழ்வின் உண்மையான ஹீரோ!!!

இவர்களைப் பற்றி நாம் எப்போது இளையவர்களுக்கு சொல்லித்தரப்போறோம்...இல்லை நமக்குச்சொல்லும் அளவுக்குத்தான் இவர்களைப் பற்றித்தெரியுமா?

குழந்தைகளுக்கு ரோல் மாடல்களை வெளியில் தேடுவானேன் நாமே ஏன் ஒரு ஹீரோவாகாக் கூடாது,....?

Sunday, April 5, 2009

நாலும் தெரிஞ்சவங்களா நீங்க? நிஜமா..

நாலும் தெரிஞ்சவங்களா நீங்க? நிஜமா..அப்ப ஒரு சவால்

இந்தப் படத்துல இருக்கிறக் குட்டிப்பாப்பா யாருன்னு தெரியுமா ?


இப்ப

உலக அழகின்னு ஆரம்பிச்சிச்சு,..இப்ப இயந்திரன்ல அவங்க வாங்கற சம்பளம் வரைக்கும் தெரியும் தான
``````````````````````````````````````````````````````````


இவரு,...முகஜாடை மாறவேயில்ல இல்ல..அப்பாவக் கொண்டு வந்துருக்கார்ன்னு நினைக்கிறேன். இவர் கதையும் புட்டு புட்டு வப்பீங்க
``````````````````````````````````````````````````````````
இவரு...?


இவரால நம்மூர்ல பாதி பசங்க ஜிம்ல தான் கிடக்குறாய்ஙே. ..சட்டில இருந்தா தானே அகப்பையில வரும்னு யாருக்கு தெரியுது..என்னவோ போங்க
``````````````````````````````````````````````````````````

இவங்க வடக்கு தெற்குன்னு பாரபட்சமில்லாம எல்லா மனச கொள்ளயடிச்சிட்டுப் போன கஜோல்ன்னு கரீக்கட்டா சொல்லிருப்பீங்க
``````````````````````````````````````````````````````````

இவங்க ஓம் சாந்தி ஓம்ல வந்து பசங்க மனசாந்தியக் கெடுத்தவங்க. மத்த விவரமெல்லாம் விரல் நுனியில்ல வச்சிருப்பீங்களே :))
``````````````````````````````````````````````````````````
இவங்க ??

தெரியலையா,...? நானே சொல்றேன். கத்ரினா. சரி சரி...இப்ப உங்களுக்கு இவங்க லேட்டஸ்ட் பாய் ஃப்ரண்டு விஷயம் வரைக்கும் தெரியுமே :))
``````````````````````````````````````````````````````````
இவங்க..?

சரியா சொல்லீட்டீங்க,..த்ரிஷா தான். இவங்க அப்பா அம்மா பேரு ஊரு எல்லா மேட்டரும் சொல்வீங்க
``````````````````````````````````````````````````````````
இதெல்லாம் ஒ.கே.. இவங்க யாருன்னு சொல்லுங்க.. நீங்க பெரிய கில்லாடின்னு ஒத்துக்கிறேன்